விழுப்புரம் மாவட்டத்துக்கு புதிய எஸ்பி… 39 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் : தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
19 May 2023, 8:39 pm

தமிழகத்தில் 39 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்ட எஸ்.பியாக சஷாங்க் சாய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஆவடி மாநகர காவல் ஆணையராக அருண் நியமனம்
திருப்பத்தூர் எஸ்.பி.யாக ஆல்பர்ட் ஜான் நியமனம்
நாகை எஸ்.பி.யாக ஸ்ரீனிவாசன் நியமனம்
ஈரோடு எஸ்.பி.யாக ஜவஹர் நியமனம்
நாமக்கல் எஸ்.பி.யாக ராஜேஷ் கண்ணன்,
வேலூர் எஸ்.பி.யாக மணிவண்ணன் நியமனம்
செங்கல்பட்டு எஸ்.பி.யாக சாய் பிரநீத் நியமனம்
திருப்பூர் எஸ்.பி.யாக சாமிநாதன் நியமனம்
விழுப்புரம் எஸ்.பி.யாக சஷாங்க் சாய் நியமனம்.

  • remorse between simbu and santhanam is the main reason for drop of str 49 சந்தானம் போட்ட கண்டிஷனால் கடுப்பான சிம்பு? STR 49 படம் கைமாறியதற்கு காரணம் இதுதானா?