காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி வெட்டிப் படுகொலை செய்த வழக்கு.. உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த தந்தை கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
26 July 2022, 10:07 am

கோவில்பட்டி அருகே புதுமண தம்பதி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவான பெண்ணின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வீரப்பட்டி கிராமத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதிகள் மாணிக்கராஜ், ரேஷ்மா ஆகியோர் நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.

இந்த கொலை வழக்கு தொடர்பாக எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இவர்கள் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த ரேஷ்மா தந்தை முத்துக்குட்டி கொலையை செய்ததாக கூறப்பட்டது.

தலைமறைவாக இருந்த முத்துக்குட்டியை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலையில் கோவில்பட்டியில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்த முத்துக்குட்டியை போலீசார் கைது செய்து உள்ளனர்

  • 5 consitions to aamir khan in the release of sitaare zameen par movie படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?