ராணுவ வீரர்களுக்கான தேர்வை எழுத வந்த வடமாநில இளைஞர்களுக்குள் அடிதடி.. போலீசார் நடத்திய தடியடி!

Author: Udayachandran RadhaKrishnan
6 November 2024, 7:59 pm

இந்திய இராணுவத்தில் இரணுவ வீரர்கள், கிளர்க் பணிக்கான தேர்வு கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

வரும் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இதில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்று வருகின்றனர்.இன்று ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா மாநில இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்க: ஆட்சியில் பங்கு கேட்டது நடிப்பா? திருமாவின் திடீர் தந்திரம்!

இந்நிலையில் காவலர் பயிற்சி பள்ளிக்கு வந்த ராஜஸ்தான் இளைஞர் திடிரென வெளியே நின்று பேசிக்கொண்டு கற்களை வீசியதாக தெரிகிறது.

இதனிடையே அதன் அருகே இருந்த வேறு வட மாநில இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் அவர்களை லேசான தடியடி நடத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

  • audience suppoting dna movie against blue sattai maran நீங்கள் முதலில் Shut Up பண்ணுங்க? DNA படத்தை கலாய்த்த ப்ளூ சட்டை மாறனை ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்!