திருச்சி விமான நிலையத்திற்கு கொரோனா அறிகுறியுடன் மலேசியாவில் இருந்து வந்த பயணிகள் : சக பயணிகள் ஷாக்…!!

Author: Udayachandran RadhaKrishnan
1 July 2022, 6:58 pm

விமான நிலையத்திற்கு பரிசோதனை செய்த போது கொரோனா அறிகுறியுடன் வந்த 2 பயணிகளை- அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று காரணமாக விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து விமானத்தில் வரும் பயணிகள் பரிசோதனை செய்த பின்பு வெளியே அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் வந்தது பயணிகளின் அனைத்து சான்றிதழ்களும் ஆய்வு செய்யப்பட்ட போது ஒரு பயணிக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பதற்கான மருத்துவ சான்றிதழ் இருந்ததை கண்ட மருத்துவ குழுவினர் உடனடியாக அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை பிரிவிற்கு அனுப்பி வைத்தனர்.

இதே போல சிங்கப்பூரிலிருந்து வந்த ஸ்கூட் ஏர்வேஸ் விமானம் பயணி ஒருவரும் தமக்கு கொரோனா தொற்று இருப்பதற்கான சான்றிதழ் இருந்தது. இதனை கண்ட மருத்துவ குழுவினர் அவரையும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!