மினி ஆட்டோவில் சிக்கிய 500 கிலோ குட்கா : இரண்டு பேர் தப்பியோட்டம்!!
28 September 2020, 7:39 pmசென்னை : கொடுங்கையூர் அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது மினி ஆட்டோவில் கடத்தி வரப்பட் 500 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
சென்னை கொடுங்கையூர் மீனாம்பாள் சாலையில் கொடுங்கையூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த டாட்டா ஏஸ் வாகனத்தை சோதனையிட முயன்றனர்.
உடனடியாக அதில் இருந்த ஓட்டுநர் மற்றும் உடன் இருந்தவர் வண்டியை அப்படியே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர் போலீசார் அந்த வாகனத்தில் சோதனை செய்த போது அதில் எட்டு மூட்டைகளில் சுமார் 500 கிலோ குட்கா இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் அதை காவல் நிலையம் எடுத்து சென்றனர். மேலும் வாகனத்தில் இருந்த 500 கிலோ குட்காவையும் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த வண்டி யாருடையது என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.