பொள்ளாச்சி மலைப்பகுதியில் கார் கவிழ்ந்து விபத்து : அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சுற்றுலா பயணிகள்..!!

Author: Babu Lakshmanan
6 October 2022, 11:06 am
Quick Share

பொள்ளாச்சி அருகே கவியருவி அருகே மலைப்பாதையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுற்றுலாப்பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

கேரள மாநிலம் மலப்புறம் எடப்பாலைச் சார்ந்தவர் ஜெனில். இவர் தனது குடும்பத்தினர் 8 பேருடன் வால்பாறைக்கு சுற்றுலா சென்றுவிட்டு மீண்டும் கேரள மாநிலம் மலப்புறம் எடப்பாலை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

பொள்ளாச்சி சாலையின் மலைப்பாதையில் சென்றபோது ஆழியார் கவியருவி அருகே
மலைப்பாதையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பயணித்த 8 பெரும் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்க உதவினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Views: - 430

0

0