மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத போது.. பேனா சின்னம் ரொம்ப முக்கியமா..? திமுகவுக்கு பிரேமலதா கேள்வி!!

Author: Babu Lakshmanan
10 February 2023, 1:55 pm
Quick Share

திருச்சி : தேமுதிகவின் பலம் குறையவில்லை என்பதை ஈரோடு இடைத்தேர்தல் வாயிலாக நாம் தெரிந்து கொள்ளலாம் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்ட விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளரும், திருச்சி தெற்கு மாவட்ட தலைவருமான குடமுருட்டி கரிகாலன், பிச்சை ரத்தினம் ஆகியோரின் மகள் சுஜாதாவிற்கும், தேமுதிக கட்சியின் தேர்தல் பணிக்குழு செயலாளர் தங்கமணி, கவிதா ஆகியோரின் மகன் கதிருக்கும் திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் இன்று திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தை தேசிய முற்போக்கு திராவிட கழக மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.

இதனை தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது :- ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் பொதுமக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர். எனவே, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அவர் கண்டிப்பாக வெற்றி பெறுவார். அவரை பார்க்கும் போது விஜயகாந்தை பார்ப்பது போல் மக்கள் எண்ணுகிறார்கள். ஈரோடு கிழக்கு தொகுதியில் நிச்சயம் அவர் வெற்றி பெறுவார்.

ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம். எனவே தேமுதிகவின் பலம் குறையவில்லை என்பதை இந்த ஈரோடு இடைத்தேர்தல் வாயிலாக நாம் தெரிந்து கொள்ளலாம். இடைத்தேர்தல் என்பது ஜனநாயகமா..? அல்லது பணநாயகமா..? , அது எப்படி நடக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே.

எழுதாத பேனாவுக்கு நினைவு சின்னம் வைப்பது என்பது தேவையில்லாதது. அதுவும் கடலில் வைப்பது என்பது தேவையில்லாதது. ஏற்கனவே விஜயகாந்த் அவர்கள் அவரை பாராட்டி தங்கப் பேனாவை கொடுத்திருக்கிறார். எங்களது கட்சியை யாரும் பின் நின்று இயக்கவில்லை. தேமுதிக தலைவர் விஜயகாந்த் மட்டுமே இயக்குகின்றார்.

மக்களது வரிப்பணத்தை கொண்டு பல திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளாமல் நிலையில், இது போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன் என கேள்வி எழுப்பினார், என தெரிவித்தார்.

Views: - 408

0

0