ஓய்வு பெறும் நாளில் விஸ்வரூபம் எடுத்த பிரச்சனை : பொறியாளர் அதிரடி சஸ்பெண்ட்..!!

Author: Udayachandran RadhaKrishnan
2 May 2024, 9:46 pm

ஓய்வு பெறும் நாளில் விஸ்வரூபம் எடுத்த பிரச்சனை : பொறியாளர் அதிரடி சஸ்பெண்ட்..!!

திருப்பூர் மாநகராட்சியில் மாநகர பொறியாளராக கடந்த சில மாதங்களாக லட்சுமணன் பணியாற்றி வந்தார். ஏப்ரல் 30ம் தேதியுடன் அவர் ஓய்வு பெறவிருந்த நிலையில், அவருக்கு அதற்கான உத்தரவு வழங்கப்படவில்லை.

அவர், இதற்கு முன் கோவை மாநகராட்சியில் பணியாற்றிய போது, கட்டட அனுமதி வழங்கியது தொடர்பாக கோர்ட்டில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.

இவ்வழக்கு விசாரணை வரும் ஜூன் மாதம் நடைபெறுகிறது.
எனவே, ஓய்வு பெறும் நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை, நகராட்சி நிர்வாக துறை செயலர் கார்த்திகேயன் பிறப்பித்தார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!