கும்மிடிப்பூண்டி சிறுமிக்கு நீதி கேட்டு போராட்டம்… குவிந்த பாஜகவினரை குண்டுக்கட்டாக கைது செய்த போலீஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 July 2025, 6:59 pm

திருவள்ளூர் மாவட்டம ஆரம்பாக்கம் பகுதியில் நான்காம் வகுப்பு பள்ளி மாணவி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது பாஜக சார்பில் சிறுமிக்கு நீதி கேட்டு மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.திமுக அரசுக்கு எதிரான பல்வேறு கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் பாஜக நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உள்ளார். அவர் கண்ணீர் மல்க வேதனையோடு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.பாஜகவினர் தமிழக அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு நடந்து வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்ய 2 பேருந்துகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்ற போது அவர்கள் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் வாகனங்களை மறித்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் போலீசாரை கண்டித்து போலீஸ் அராஜகம் என கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது திருவள்ளூர் கிழக்கு மாவட்டத் தலைவர் சுந்தரம், தேசிய செயற்குழு உறுப்பினர் ஆர் எம் ஆர் ஜானகிராமன், மாநில அரசு தொடர்பு பிரிவு தலைவர் பாஸ்கர் முன்னாள் மாவட்ட தலைவர் செந்தில்குமார்
மாவட்ட பொதுச் செயலாளர் அன்பாலயா சிவகுமார், கே ஜி எம் சுப்பிரமணி, மாவட்ட பொருளாளர் சுரேஷ், ஆகியோர் உடன் இருந்தனர்

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!