ரெய்டில் ரூ.11 கோடி சிக்கிய விவகாரம்.. அமைச்சர் மகனும் திமுக எம்பியுமான கதிர் ஆனந்த் வழக்கில் அதிரடி உத்தரவு!
Author: Udayachandran RadhaKrishnan1 September 2025, 4:56 pm
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் சார்பாக வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாட செய்ய இருந்ததாக திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் என்பவரின் சிமெண்ட் குடோனில் இருந்து ரூ.11 கோடி கைப்பற்றப்பட்டது.
பின்னர் தேர்தல் ரத்து செய்யப்பட்டு மீண்டும் நடைபெற்றது. அதில் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார். இது தொடர்பாக தொடர்பாக எம்.பி கதிர் ஆனந்த், அவரின் ஆதரவாளர்கள் பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் ஆகிய மூன்று பேர் மீதும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்-1951 பிரிவு 125(ஏ) மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 171(இ), 171 பி(2) உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் காட்பாடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கு வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஒன்றில் நடைபெற்று வரும் நிலையில், இன்று எம்.பி கதிர்ஆனந்த் வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஒன்றில் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கு விசாரணையை வரும் 22.09.2025 – ம் தேதிக்கு ஒத்தி வைத்து ஆஜராகும்படி உத்தரவிட்டார். இதனையடுத்து எம்.பி கதிர் ஆனந்த் புறப்பட்டு சென்றார்.
