என்னை நோக்கி செருப்பு வீசும்போது ஏழு அல்லது எட்டு சைஸ் ஆக இருக்க வேண்டும்.. சீமான் திடீர் வேண்டுகோள்!

Author: Udayachandran RadhaKrishnan
9 January 2025, 8:02 pm

புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பின்பு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, பெரியார் குறித்து நான் பேசிய கருத்துகள் உண்மைதான், ஆதாரம் எல்லாம் திமுகவிடம்தான் உள்ளது. என்னிடம் கேடடால் என்ன நியாயம்?

இதையும் படியுங்க: பைக்கில் இருக்கி கட்டிபிடித்து வந்த தம்பதி.. சந்தேகம் அடைந்த போலீசார் : விசாரணையில் ஷாக்!

பெரியார் குறித்த கருத்த தெரிவித்த என்மீது கோபம் கொண்டுள்ள அமைப்புகள், ஏன் டங்க்ஸ்டன் மற்றும் அண்ணா பல்கலை., மாணவி விவகாரத்தில் குரல் கொடுக்கவில்லை?

என்னை நோக்கி செருப்பூ வீசுபவர்களுக்கு நான் சொல்வது இதுதான், செருப்பு 7 அல்லது 8 சைஸ் செருப்பாக இருக்க வேண்டும், அதே போல முட்டை என்பது நாட்டுக்கோழி முட்டையாக வீச வேண்டும் என கூறினார்.

Seeman Controversial Speech About Periyar and Slipper

எத்தனையோ வழக்குகள் என் மீது பதியப்பட்டுள்ளது. 50 அல்ல 100 என எத்தனை வழக்கு போட்டாலும் நான் எதிர்கொள்ள தயாராக உள்ளேன்.தேசிய பாதுகாப்பு சட்டத்தை பார்த்தவன் நான் என கூறினார்.

  • famous journalist criticize mani ratnam for muththa mazhai song ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…