மக்கள் எல்லாம் ஒன்னா சேர்ந்து ராசாக்கா…. நா.த.க. வேட்பாளருக்கு பாட்டு பாடி வாக்குசேகரித்த சீமான்..!!

Author: Babu Lakshmanan
8 April 2024, 6:03 pm
Quick Share

தருமபுரியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து நடந்த பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பாட்டுபாடி வாக்கு சேகரித்தார்.

தருமபுரி நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மருத்துவர் அபிநயாவை ஆதரித்து இன்று தருமபுரி நான்கு ரோட்டில் நாம் தமிழர்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேச துவங்குவதற்கு முன் வானத்தில் இரு கழுகுகள் வட்டமிட்டன.

மேலும் படிக்க: ஆட்சிக்கு வராமலேயே நல்ல திட்டங்களை பெற்றுக் கொடுத்தது பாமக : சௌமியா அன்புமணி பிரச்சாரம்…!!

அதனை தொடர்ந்து, அவர் பேச முற்பட்ட போது, தனியார் ஆம்புலன்ஸ் குறுக்கிட ஆம்புலன்ஸ் போன பின் பேச ஆரம்பித்தார். அவர் கூறியதாவது :- முயற்சி எடுக்க வேண்டும். முடிவு பண்ணி பார்க்க வேண்டும், எனக் கூறி பாட்டு பாடி வாக்குசேகரித்தார்.

“என் மக்கள் எல்லாம் ஒன்னா சேர்ந்து ராசாக்கா.. மைக் சின்னத்துல ஓட்டு போடணும் மையாக்கா.. மாற்றம் வரணும் பாரு நாட்டு மக்கள் நல்லாயிருக்க, நோக்கம் இருப்பது யாரு ?மாற்றம் வரணும் பாரு? நாட்டு மக்கள் நல்லா இருக்க நோக்கம் இருப்பது யாரு? அந்த எண்ணம் உள்ள சின்னத்தில ராசக்கா நம்ம எல்லாரும் ஓட்டு போடணும் மையாக்கா… ஏற்றம் வரணும் பாரு… ஏழை சனம் வாழ்க்கையில முன்னேற்றம் வரணும் பாரு… அந்த நோக்கமுள்ள சின்னத்தில.. அந்த எண்ணம் உள்ள சின்னத்துல ராசாக்கா… நம்ம எல்லாருமே ஓட்டு போடணும் மையாக்கா..” என பாட்டு பாடினார்.

மேலும் படிக்க: நயினாரை சிக்க வைத்ததே அண்ணாமலைதான்… மன்சூர் அலிகான் பகீர் குற்றச்சாட்டு…!!

தொடர்ந்து, எங்களின் வெற்றி உங்களின் வெற்றி. நாம் பிறந்த தமிழனத்தின் வெற்றி. இதுவரை ஏழ்மை, தாழ்மை, வறுமை, இவற்றை துரத்தி அடிக்க மைக் சின்னத்தை அழுத்தி வாக்கை செலுத்துங்க, என பேசி அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Views: - 119

0

0