செந்தில் பாலாஜி, உதயநிதிக்கு விரைவில் சம்மன்? தயாராகும் விசாரணை அமைப்புகள் : பாஜக பிரமுகர் தகவல்..!!
Author: Udayachandran RadhaKrishnan3 June 2025, 4:04 pm
பாஜக மாநில துணைத்தலைவர் கே பி ராமலிங்கம் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறும் போது, மதுரையில் வரும் 22 ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு பாஜக மற்றும் ஆன்மிக அமைப்புகள் சார்பில் நடைபெறும்.
கடந்த 70 ஆண்டுகளாக ஆன்மிக உணர்வுக்கு எதிராக பல்வேறு தவறான பிரசாரங்கள், எதிர்மறை கருத்துகள் பரப்பப்பட்டன. அரசியல் பிழைப்புக்காக நாட்டு மக்களை ஏமாற்றி, ஹிந்து தெய்வங்களை அவமானப்படுத்துவோருக்கு இந்த மாநாடு முற்றுப்புள்ளி வைக்கும் என தெரிவித்தார்.
இதையும் படியுங்க: காதலனை நம்பி காட்டுக்குள் சென்ற காதலி.. 35 இடங்களில்.. இச்சையை தீர்த்து வெறிச்செயல்..!!
தொடர்ந்து அவர் பேசும்போது, மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் நல்ல ஆரோக்கியத்துடன் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்படுவதற்கு என்ன காரணம் என தெரியப்படுத்த வேண்டும்.
செந்தில் பாலாஜி வழக்கு, போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் உதயநிதிக்கு சம்மன் அனுப்புவதற்கு விசாரணை அமைப்புகள் தயாராகி வருகிறது. சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கவே உடல்நிலை சரியில்லை என்கிறார்கள்.

பொதுவாக, ஆட்சி கலைப்பு வேலைகளில் மத்திய அரசு ஈடுபடுவதில்லை, திமுக அரசு எதற்கொடுத்தாலும் மத்திய அரசை குறை கூறுவதிலேயே குறியாக உள்ளது.
மோடி அரசின் 11 ஆண்டுகால சாதனைகளை, விளக்க கூட்டங்கள் மூலம் பட்டிதொட்டி எங்கும் நாட்டு மக்களிடம் பிரசாரம் வாயிலாக கொண்டு சேர்ப்போம். அடுத்த 4 மாத காலம் பாஜக தொடர் பிரசாரம் மேற்கொள்ளும். இதன் மூலம் திமுகவை ஆட்சியில் இருந்து தூக்கி வீசும் நாள் வெகுதொலைவில் இல்லை என தெரிவித்தார்.