2வது முறையாக ஆஜராகாத செந்தில் பாலாஜியின் சகோதரர்… அமலாக்கத்துறை அப்செட்… ….!!

Author: Babu Lakshmanan
20 June 2023, 12:08 pm

அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் 2வது முறையாக செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் நேரில் ஆஜராகவில்லை.

கரூரில் வருமான வரித்துறையினர் கடந்த மே 26ம் தேதி தொடங்கிய சோதனை 8 நாட்களாக நடைபெற்றது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் அலுவலகத்தில் தீவிர சாதனையில் ஈடுபட்ட வருமான வரித்துறை அதிகாரிகள், ஜுன் 7ம் தேதி அசோக் குமார் நேரில் ஆஜராக கூறி அவரது வீட்டில் சம்மன் ஒட்டி இருந்தனர். அதற்கு கால அவகாசம் கேட்டு அவர்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து, 2வது முறையாக செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், இந்த முறையும் அவர் ஆஜராகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் நேரில் ஆஜராக அவகாசம் கோரியுள்ளதாக கூறப்படுகிறது. தன்னிடம் கேட்ட ஆவணங்களை திரட்டி வருவதால், தன்னால் ஆஜராக முடியவில்லை என்று, தனது வழக்கறிஞர் மூலமாக அமலாக்கத்துறையினரிடம் இந்த கோரிக்கையை அவர் வைத்துள்ளது.

  • famous journalist criticize mani ratnam for muththa mazhai song ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…