சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. 49 வயது கூலித்தொழிலாளியின் கோரமுகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 June 2025, 4:08 pm

கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

இதையும் படியுங்க: 17 வயது சிறுவனுடன் வலுக்கட்டாயமாக உல்லாசம்… போக்சோவில் 32 வயது பெண் கைது!

கரூர் மாவட்டம், தென்னிலை மேல்பாகம் புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 49) கூலி வேலை செய்து வருகிறார்.

இவர், 11 வயது மற்றும் 9 வயதுடைய, இரண்டு சிறுமிகளுக்கு கடந்த மே மாதம் 24 ஆம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

Sexual harassment of girls.. 49-year-old laborer arrested under POCSO

இதுகுறித்து, சிறுமிகளின் தாய் கா.பரமத்தி மகளிர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மகேந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!