கொஞ்சம் கவனமாக இருந்தா தப்பி இருக்கலாம்… கோவையில் பெண் இன்ஸ்பெக்டர் பலியான ஷாக் சிசிடிவி காட்சி!
Author: Udayachandran RadhaKrishnan26 September 2025, 4:46 pm
கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆய்வாளராக பணி புரிந்து வந்த பானுமதி (52) இன்று காலை காமராஜர் ரோடு சிங்காநல்லூர் பேருந்து நிலையம் சரவணா பார்க்கிங் அருகில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த போது அப்போது எதிர்பாரவிதமாக எதிரே வந்த அரிசி மூட்டை ஏற்றி வந்த ஈச்சர் வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்து உள்ளார்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலமாக கோவை காமராஜர் சாலையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஆய்வாளர் பானுமதி இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர். இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரேத பரிசோதனைக்காக உடல் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. ஆய்வாளர் பானுமதி உயிரிழந்த சம்பவம் காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆய்வாளராக பணி புரிந்து வந்த பானுமதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது ஈச்சர் வாகனம் உரசி பலியான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி#Trending | #viralvideo | #updatenews | #accident | #roadsafty pic.twitter.com/iASaR2m53a
— UpdateNews360Tamil (@updatenewstamil) September 26, 2025
இதனிடையே காவலர் உயிரிழந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பார்க்கவே பதை பதைக்க வைத்துள்ளது அந்த வீடியோ காட்சிகள்.
