கோவை கடை வீதியில் பெண் வாடிக்கையாளர்களிடம் அத்துமீறும் கடை ஊழியர்கள்.. ரோந்து சென்ற போலீசாருக்கு காத்திருந்த ஷாக்!

Author: Udayachandran RadhaKrishnan
20 August 2024, 11:54 am

கோவை ஒப்பணக்கார வீதி வைசாள் வீதி, பெரிய கடை வீதி உள்ளிட்ட இடங்களில் ஏராளமான ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள், பேன்சி கடைகள் உள்ளிட்டவை உள்ளன.

இங்கு பொருட்கள், ஆடைகள் வாங்க நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வருகின்றனர். இவ்வாறு வரும் பொதுமக்களை கடை ஊழியர்கள் தங்களது கடைகளுக்கு முன் நின்று கொண்டு தங்களது கடைக்கு வரும்படி அழைப்பது வாடிக்கையானது.

இவ்வாறு வாடிக்கையாளர்களை அழைக்கும் போது கடைக்காரர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வாடிக்கையாளர்களிடம் ஊழியர்கள் தகராறு ஈடுபடும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எனவே இதனை கண்காணிக்க போலீசார் அடிக்கடி அந்த பகுதியில் ரோந்து செல்கின்றனர். மேலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கடை ஊழியர்களின் செயல்பாடுகளை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பெரிய கடை காவல் நிலைய போலீசார் வீதி பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது ஒப்பனகார வீதி சந்திப்பு, வைசாள் வீதியில் வாடிக்கையாளர்களை அழைப்பது தொடர்பாக கடைக்காரர்கள் இடையே பிரச்சனை ஏற்பட்டது.

இதை அடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்பொழுது அங்கு இருந்த கடை ஊழியர்கள் சிலர் போலீசாரிடம் தகராறு ஈடுபட்டவுடன் அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக தெரிகிறது.

இதை அடுத்து போலீஸ்காரர் ரங்கராஜ் இது குறித்து பெரிய கடை வீதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கடை உரிமையாளர் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த அதிபதி, ஜவுளிக்கடை ஊழியர்கள் கரும்பு கடையை சேர்ந்த ஹக்கீம், சர்புதீன், உக்கடத்தைச் சேர்ந்த அன்சார், சாரமேடையை சேர்ந்த முகமது அஜ்மல் ஹுசைன், சுண்டக்காமுத்தூரை சேர்ந்த ஹரிவேந்தரா ஆகிய ஆறு பேரை போலீசார் பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!