தொழில் போட்டியில் தங்கை கொலை : அக்கா உட்பட 2 பேர் கைது…

Author: kavin kumar
9 February 2022, 2:28 pm
Quick Share

திருச்சி : திருச்சியில் தொழில் போட்டியில் தங்கையை கொலை செய்த அக்கா மற்றும் அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டியை பகுதியை சேர்ந்தவர் சிங்கதுரை. இவரது மனைவி இறந்த பின்னர் தொழில் காரணமாக தனது மகள்கள் கலைவாணி (36), கலைச்செல்வி (34), முத்துலட்சுமி (30) ஆகிய 3 மகள்கள் குடும்பத்துடன் இவர்கள் திருச்சி அரசு மருத்துவமனை எதிரே உள்ள ஆபீசர்ஸ் காலனியில் தங்கி தனித்தனியாக வியாபாரம் செய்து வருகிறார்கள். கலைவாணி கம்பங்கூழ் வியாபாரமும், கலைச்செல்வி ஜூஸ் கடையும், முத்துலட்சுமி இளநீர் வியாபாரமும் செய்து வந்தனர். இதில் முத்துலட்சுமியின் கணவர் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து சென்றுவிட்டார்.

இதனால் அவர் தனது தந்தை சிங்கதுரையுடன் சேர்ந்து இளநீர் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் தொழில் போட்டி காரணமாக அக்காள் கலைச்செல்விக்கும், முத்துலட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 6ந் தேதி மாலை கலைச்செல்வி தனது கணவர் நாகராஜ் இருவரும் சிங்கதுரையிடம் அங்கு இளநீர் கடை போடக்கூடாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் இவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நாகராஜ் கையில் வைத்திருந்த அரிவாளால் முத்துலட்சுமியின் தலையில் ஓங்கி வெட்டினார். இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழந்தார்.

முத்துலட்சுமி ரத்தவெள்ளத்தில் கீழே சாய்ந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அரசு மருத்துவமனை போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, நாகராஜ், கலைச்செல்வி ஆகியோரை கைது செய்தனர். இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முத்துலட்சுமி நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை அரசு மருத்துவமனை போலீசார் கொலை வழக்காக மாற்றம் செய்து உள்ளனர்.

Views: - 966

0

0