உல்லாசமா இருக்கலாம் வா.. வற்புறுத்திய கள்ளக்காதலன் : தனியாக நடந்த சந்திப்பு.. உள்ளே புகுந்த இளைஞர்!

Author: Udayachandran RadhaKrishnan
14 May 2025, 12:50 pm

வேலூர் மாவட்டம் காட்பாடி திருவலம் அடுத்த லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயா (வயது 45) இவரது கணவர் சேட்டு இந்த தம்பதியருக்கு இந்து குமார் என்கின்ற மகன் உள்ளளர்.

கடந்த 12 வருடங்களுக்கு முன்பு ஜெயாவின் கணவர் சேட்டு இறந்த நிலையில் ஜெயா மற்றும் அவரது மகன் இந்து குமார் (வயது 22) உடன் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு கணவர் இறந்த நிலையில் அதே லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த சேட்டு என்பவரின் மகன் ஐயப்பன் (வயது 35) உடன் ஜெயாவிற்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அந்த பழக்கமானது கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இதையும் படியுங்க: படுக்கையில் மாணவனுடன் ஆசிரியை உல்லாசம்… ஜன்னல் வழியாக பார்த்த கணவன் : டுவிஸ்ட்!

ஜெயாவின் மகன் இந்து குமார் வளர வளர தனது தாயுடனான கள்ளக்காதலை முறித்துக் கொள்ளும்படி பலமுறை ஐயப்பனிடமும் கள்ளக்காதலை முறித்துக் கொள்ளும்படி எச்சரித்து வந்ததாகவும் இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஜெயாவுடன் கள்ளக்காதலை முறித்துக் கொள்ள மறுத்த நிலையில் ஐயப்பனை தீர்த்துக்கட்ட கள்ளக்காதலி ஜெயாவும் அவரது மகன் இந்துகுமாரும் திட்டம் தீட்டியுள்ளனர்.

வழக்கம்போல் (10.05.2025) நேற்று இரவு ஜெயா புதிதாக கட்டிக் கொண்டிருக்கும் வீட்டிற்கு ஐயப்பனை வரவழைத்துள்ளார்.

இந்த நிலையில் அங்கே ஏற்கனவே பதுங்கி இருந்த ஜெயாவின் மகன் இந்துக்குமார் தான் மறைத்து வைத்திருந்த இரும்பு ராடால் ஐயப்பனின் தலையில் தாக்கியுள்ளார்.

இதில் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த ஐயப்பன் துடிதுடித்துள்ளார். ஆத்திரமடங்காத கள்ளக்காதலி ஜெயா ஐயப்பனின் முகம் தலை உள்ளிட்ட இடங்களில் கல்லால் நசுக்கி துடிக்க துடிக்க கொலை செய்து லட்சுமிபுரம் பகுதியில் ஜெயா புதிதாக வீடு கட்டிக் கொண்டிருக்கும் பகுதியில் சடலத்தை வீசிவிட்டு ஒன்றுமே நடக்காததை போல் தாயும் மகனும் இருந்துள்ளனர்.

இதனை அடுத்து சடலத்தை கண்ட பகுதி மக்கள் உடனடியாக திருவலம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காட்பாடி டிஎஸ்பி பழனி காவல் ஆய்வாளர்கள் கருணா முரளிதரன் உதவி ஆய்வாளர்கள் தர்மன் மணிகண்டன் ஆதர்ஷ் உள்ளிட்ட போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Son and Mother Killed Illegal Boy Friend

மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து ஐயப்பனின் கள்ளக்காதலி ஜெயா மற்றும் அவரது மகன் இந்துக்குமார் ஆகியோரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் தாயும் மகனும் சேர்த்துக்கொண்டு திட்டம் தீட்டி ஐயப்பனை கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

தாய் மகன் இருவரை கைது செய்து திருவலம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாயை போன்று பார்க்க வேண்டிய பெண்ணிடம் வயதுக்கு மீறிய உறவு வைத்துக் கொண்டதால் பரிபோன விவசாயின் உயிர் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

  • nithya menen answer about the hand shake video controversy யாருக்குமே கை கொடுக்க மாட்டேன்- சர்ச்சை வீடியோவுக்கு கறாராக பதில் சொல்லும் நித்யா மேனன்!