நீட் விலக்கு மசோதா விவகாரம்: தமிழக சட்டப்பேரவையில் இன்று சிறப்பு கூட்டம் கூடுகிறது..!!

Author: Rajesh
8 February 2022, 9:02 am
stalin assembly - updatenews360
Quick Share

சென்னை: நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இந்த மசோதாவை 142 நாட்களுக்கு பிறகு ஆளுநர் ஆர்.என். ரவி அரசுக்கே திருப்பி அனுப்பினார். நீட் விலக்கு மசோதா உச்சநீதிமன்ற உத்தரவிற்கு மாறாக உள்ளதாக ஆளுநர் மாளிகை தமிழக அரசுக்கு விளக்கம் அளித்துள்ளது. இந்நிலையில், மசோதா திருப்பி அனுப்பியதை தொடர்ந்து பிப்ரவரி 5ம் தேதி சட்டமன்ற அனைத்துகட்சி கூட்டம் நடைபெற்றது.

அனைத்துக்கட்சி கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி சட்டமன்ற சிறப்பு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுக மற்றும் பாஜக கலந்துகொள்ளவில்லை. நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் நடைபெறும் நிகழ்வுகளை நேரலை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் 11 ஆண்டுகளில் 5வது முறையாக இன்று சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது. 2017ல் ஜல்லிக்கட்டு தடையை நீக்கவும், 2018ல் மேகதாது அணை விவகாரத்துக்காகவும் சிறப்பு கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Views: - 792

0

0