DRAW செய்ய கெஞ்சிய ஸ்டோக்ஸ்… அதெல்லாம் முடியாது, போய் பந்து வீசு என கூறிய ஜடேஜா!
Author: Udayachandran RadhaKrishnan28 July 2025, 1:28 pm
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை வகித்தது. நான்காவது டெஸ்டில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்கியது.
முதல் இன்னிங்ஸில் 311 ரன்கள் பின்தங்கியிருந்த இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் பொறுப்புடன் விளையாடி, ஐந்தாவது நாள் வரை போட்டியை நீட்டித்தது.
ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 85 ரன்களுடன் சதத்தை நெருங்கியிருந்தபோது, இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், 14 ஓவர்கள் மீதமிருக்கையில் போட்டியை டிரா செய்ய முன்மொழிந்தார்.
ஆனால், சதத்திற்கு அருகில் இருந்த ஜடேஜா இதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனால் கோபமடைந்த இங்கிலாந்து வீரர்கள், ஜடேஜா மற்றும் சுந்தரை சீண்டும் வகையில் நடந்துகொண்டனர்.
இருப்பினும், ஜடேஜாவும் சுந்தரும் அபாரமாக விளையாடி சதம் அடித்தனர். சதத்திற்குப் பிறகு இந்திய அணி போட்டியை டிரா செய்ய ஒப்புக்கொண்டது. ஆனால், போட்டி முடிந்த பிறகு, ஜடேஜா இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸிடம் கைகுலுக்க முயன்றபோது, ஸ்டோக்ஸ் அவரைப் புறக்கணித்து, வாஷிங்டன் சுந்தருடன் மட்டும் கைகுலுக்கிவிட்டு சென்றார்.
இதனால் கோபமடைந்த ஜடேஜா, ஸ்டோக்ஸை அழைத்து பேசினார். ஸ்டோக்ஸ் பின்னர் கைகுலுக்கினாலும், ஜடேஜாவை நேரடியாக பார்க்கவில்லை, இது அவரது கோபத்தை வெளிப்படுத்தியது.
மேலும், இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக், ஜடேஜாவின் சதத்தைக் கொண்டாடியபோது போட்டியை டிரா செய்ய முன்மொழிந்து, இந்திய வீரர்களை சீண்ட முயன்றதாகவும், ஆனால் சுந்தர் அதைத் தடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Indian men don’t flinch…until you touch their ego! 👿🔥#INDvsEND #RavindraJadeja #WashingtonSundar #TestCricket #BenStokes #Jadeja pic.twitter.com/BO09dJgVcF
— BeeDee (@dinsha_bharat) July 27, 2025
இந்தச் சம்பவங்கள் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. “இந்திய வீரர்களின் சதத்தைத் தடுக்கவே இங்கிலாந்து அணி டிராவை முன்மொழிந்தது,” என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்த சம்பவம், தொடரின் இறுதி டெஸ்டிற்கு மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
