கிடுகிடுவென அதிகரித்த கொரோனா பலி எண்ணிக்கை… 2வது இடத்தில் கோவை… ஆயிரத்தை நோக்கி நகரும் குமரி, ஈரோடு!!
Author: Babu Lakshmanan18 January 2022, 7:56 pm
சென்னை: தமிழகத்தில் மேலும் 23,888 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 23,888 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29 லட்சத்து 87 ஆயிரத்து 254 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 61ஆயிரத்து 171 ஆக அதிகரித்துள்ளது. இன்று 29 பேர் உயிரிழந்துள்ளார்.
இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 038 ஆக அதிகரித்துள்ளது. இன்று 15,036 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 89 ஆயிரத்து 045 ஆக அதிகரித்துள்ளது. இதில். அதிகபட்சமாக சென்னையில் 8,305 பேருக்கும், இதற்கு அடுத்தபடியாக கோவையில் 2,236 பேருக்கும், மூன்றாவது இடத்தில் செங்கல்பட்டில் 2,143 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
0
0