கோவை அருகே பழைய இரும்பு குடோனில் பயங்கர தீ விபத்து : கொளுந்து விட்டு எரிந்த தீயை அணைக்க 2 மணி நேரம் போராட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 November 2022, 10:57 am

கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ள பழைய இரும்பு குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.

கோவை போத்தனூர் – செட்டிபாளையம் சாலை, அரசு பணியாளர் குடியிருப்பு அருகே வசீப்ராஜா என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு குடோன் உள்ளது.

இந்த குடோனில் இரவு 10 மணியளவில் திடிரென தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் அங்கிருந்த மின் இணைப்பை துண்டித்து விட்டு, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.

இந்த தீ வித்தில் பல லட்சம் மதிப்பிலான இரும்பு பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. சம்பவம் தொடர்பாக செட்டிபாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • famous journalist criticize mani ratnam for muththa mazhai song ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…