சூப்பர் சரவணா ஸ்டோரில் ஏற்பட்ட பயங்கர தீ… மருத்துவமனையில் ஊழியர்கள்.. ரூ.37 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 March 2023, 11:47 am
Super Saravana Stores - Updatenews360
Quick Share

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர் 9 மாடிகளை கொண்டது. இந்தக் கடையில் கடந்த 1ம் தேதி மாலை 4:30 மணியளவில் ஒன்பதாவது தளத்தில் உள்ள புட் கோர்ட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதனையடுத்து அந்தப் பகுதி முழுவதும் கடுமையான புகை வெளியேறிய நிலையில் அங்கிருந்த ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

அந்த நிலையில் அடுத்தடுத்த தளங்களுக்கும் புகை பரவியதால் வாடிக்கையாளர்கள் பணியாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

இந்த விபத்தில் ஒன்பதாவது ப்ளோரில் இருந்த 4 ஊழியர்கள் காயமடைந்து மயக்கம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஒன்பதாவது தளத்தில் ஃபுட் கோர்ட் அதே போன்று அடுத்த தளத்தில் எளிதில் தீப்பற்றக்கூடிய எலக்ட்ரானிக் மர சாமான்கள் பிளாஸ்டிக் போன்றவைகள் இருப்பதால் புகை அதிகரித்து காணப்பட்டது.

இதனை அடுத்து தீயணைப்பு தீ விபத்து சம்பவம் நடைபெற்ற பகுதியில் வந்து தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் சரவணா ஸ்டோர்ஸ்சில் 37 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக மாட்டுத்தாவணி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

Views: - 321

0

0