காஷ்மீரில் கொத்து கொத்தாக சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொலை : எந்த மதம் என கேட்டு சுட்ட தீவிரவாதிகள்..!
Author: Udayachandran RadhaKrishnan23 April 2025, 11:01 am
காஷ்மீர் பகல்காமில் தீவிரவாதிகள் தாக்குதலில் 28 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பள்ளத்தாக்கில் சுற்றுலா பயணிகளை சரமாரியாக தீவிரவாதிகள் சுட்டு கொன்றனர். இது தொடர்பாக உள்துறை அமைச்ச அமித்ஷா உடனடியாக காஷ்மீருக்கு விரைந்து ஆலோசனையை நடத்தினார்.
அதே சமயம் சவதியில் இருந்து பிரதமர் மோடி, உடனே தனது பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு இந்தியா திரும்பினார். இந்த சம்பவத்தை கண்டித்து ஜம்மு காஷ்மீரில் பந்த் அறிவிக்கப்பட்டு, கடைகளை வியாபாரிகள் அடைத்துள்ளனர்.
என்ன நடந்தது என்ற திடுக்கிடும் தகவல்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
காஷ்மீர் பகல்காமில் மினி சுவிட்சர்லாந்து என கூறப்படும் பைசரன் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகள் தாக்குதல் நடந்துள்ளது.

பகல்காமில் இருந்து 3.5 கிமீ மலையேறி சுற்றுலாபயணிகள் பைசரன் பள்ளத்தாக்கை அடைய வேண்டும்,பைசரன் பள்ளத்தாக்கு முழுக்க முழுக்க பைன் மரக்காடுகளால் சூழப்பட்டுள்ள ஒரு பகுதி.
பல ஆண்டுகளாக பைசன் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இல்லாததால் ராணுவம் போடப்படவில்லை. ராணுவம் இல்லாததை பயன்படுத்திக் கொண்டு சுற்றுலா பயணிகள் சுமார் 28 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியுள்ளனர் தீவிரவாதிகள்
சுற்றுலா வந்த புதுமண ஜோடிகளிடம் சென்று உங்கள் மதம் என்ன என்று தீவிரவாதிகள் கேட்டுள்ளனர்.இஸ்லாமியர் இல்லை என தெரிந்த உடன் ஆண்களை மட்டும் சுட்டுக் கொலை செய்துள்ளனர் தீவிரவாதிகள்
இஸ்லாமியர் என கூறும் சுற்றுலா பயணிகளிடம் கலிமா எனப்படும் முஸ்லீம் மதம் தொடர்புடைய வாசகங்களை ஒப்புவிக்க கூறியுள்ளனர் தீவிரவாதிகள்.
கலிமா கூறத் தெரியாதவர்களையும் ஈவு இரக்கமின்றி நெற்றி பொட்டில் சுட்டு கொலை செய்துள்ளனர் தீவீரவாதிகள்.
தாக்குதலை தடுக்க வந்த உள்ளூர் கடை வியாபாரிகள், சுற்றுலா வழிகாட்டிகளையும் தீவிரவாதிகள் சுட்டு கொலை செய்துள்ளனர்
சுற்றுலா பயணிகளை வரிசையாக நிற்க வைத்து அவர்களின் நாடு, மாநிலம், ஊர், மதம் போன்றவற்றை தெரிந்து கொண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.