எஸ்எஸ்ஐ கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி என்கவுன்டரில் பலி.. உதவி ஆய்வாளர் படுகாயம்.. நடந்தது என்ன?
Author: Udayachandran RadhaKrishnan7 August 2025, 11:01 am
திருப்பூர் உடுமலை அருகே குடிமங்கலம் பகுதியில் குடும்ப தகராறை விசாரிக்க சென்ற எஸ்எஸ்ஐ சண்முகவேல் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்
இந்த சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எதிர்க்கட்சிகள் போலீசாருக்கு கூட பாதுகாப்பு இல்லை என தமிழக அரசை விமர்சித்தனர்.
இந்த சம்பவம் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டத்தில் நடந்தது. தோட்டத்தில் பணியாற்றிய மூர்த்தி அவரது மகன்கள் தங்க பாண்டியன், மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றனர்.
இதையடுத்து 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில், மூர்த்தி மற்றும் தங்கப்பாண்டியன் இருவரும் போலீசில் சரணடைந்தனர்.
தலைமறைவாக இருந்த மணிகண்டனை போலீசார் தேடி வந்த நிலையில், இன்று அதிகாலை போலீசாரால் அவர் என்கவுன்டர் செய்யப்பட்டார்.
தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் கைது செய்யப்பட்ட மணிகண்டனை கொலை நடந்த தோட்டத்துக்க அழைத்து சென்றனர்.
அப்போது அவர் அரிலாளை எடுத்து உதவி ஆய்வாளர் சரவணகுமாரை தாக்கியுள்ளார். இதனால் தற்காப்ஹபக்காக போலீசார் மணிகண்டனை சுட்டதில் அவர் காயமடைந்துள்ளார்.

உடனே உடுமலை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்ற போது, செல்லும் வழியிலேயே உயிரிழந்து விடட்தாக மருத்துவர்கள் கூறினர். விரைவில் முழு விளக்கம் அளிக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
