நடந்து சென்றவரிடம் செல்போனை பறித்து சென்ற வாகன ஓட்டி : பரபரப்பு சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
19 July 2022, 1:41 pm
Cell Phone Theft - Updatenews360
Quick Share

இருசக்கர வாகனத்தில் வந்து செல்போனை பறித்துவிட்டு பறந்த கொள்ளையனின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் அருள்ராஜ் என்பவர் வீடியோ கால் பேசிக்கொண்டு வந்துள்ளார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்து லாவகமாக அவரது செல்போனை பிடுங்கி செல்கிறார்.

இச்சம்பவம் தொடர்பாக காந்திபுரம் காட்டூர் காவல் நிலையத்தில் அருள்ராஜ் அளித்த புகாரின் பேரில் செல்போன் பறித்து சென்ற சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் அப்ப பதிவுகளைக் கொண்டு காவல்துறையினர் இருசக்கர வாகனத்தின் பதிவெண்ணை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 475

0

0