காதலனை நம்பி காட்டுக்குள் சென்ற காதலி.. 35 இடங்களில்.. இச்சையை தீர்த்து வெறிச்செயல்..!!
Author: Udayachandran RadhaKrishnan3 June 2025, 1:49 pm
உத்தரபிரதேசத்தில் நடந்த ஒரு சம்பவம் தான் நெஞ்சை உலுக்கியுள்ளது. கோத்வாலி மைந்தர் பகுதியில் வசித்து வந்த இளம் பெண்ணை ரஃபி என்ற வாலிபர் காதலித்து வந்துள்ளார்.
இருவரும் கடந்த 2 வருடமாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் காதலனுக்கு உள்ள தீய பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக காதலிக்கு தெரியவந்தது.
இதையும் படியுங்க: கார் ஷோரூமில் கைவரிசை.. வாங்குவது போல நடித்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள காரை திருடிய ஆசாமி!
இதையடுத்து காதலனுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார் இளம்பெண். இதனால் கடுப்பான ரஃபி, உன்னிடம் பேச வேண்டும் என காட்டு பகுதிக்கு அழைத்துள்ளார்.
காதலனை நம்பி காட்டுக்குள் போன இளம்பெண், கடும் வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் கோபமான இளம்பெண், காதலனை கன்னத்தில் அறைந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த காதலன் ரஃபி, இளம்பெண்ணை ஸ்க்ரூ டிரைவைரை வைத்து குத்தி குத்தி கொலை செய்துள்ளார். இளம்பெண்ணின் அந்தரங்க உறுப்பில் குத்தியதும் பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
தனது ஆத்திரம் தீர 35 இடங்களில் ஸ்க்ரூ டிரைவரால் குத்தி குத்தி கொலை செய்துள்ளார். இதையடுத்து ரஃபியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.