இளம் இயக்குனர்களின் அலட்சியங்கள் தான் பட தோல்விகளுக்கு காரணம்.. பீஸ்ட் தோல்வி குறித்து பிரபல இயக்குனர் பேச்சு..!

Author: Rajesh
19 April 2022, 1:13 pm
Quick Share

தமிழக சினிமா ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்திருந்த திரைப்படம் தான் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம். இந்த திரைப்படத்திற்காக, 10 ஆண்டுகளுக்கு பின்னர் புரோமோஷன் புரோமோஷன் செய்வதற்கு, விஜய் பேட்டி கொடுத்தார். அந்த அளவுக்கு இந்த படத்தின் வெளியிட்டு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது படக்குழு.

ரசிகர்களின் பெரும் ஆதரவோடு கடந்த ஏப்ரல் 13ம் தேதி உலகம் முழுவதும் பீஸ்ட் திரைப்படம் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படம் விஜய்க்கு 65வது படம், இயக்குனர் நெல்சனுக்கு 3வது படம் ஆகும்.

எனவே அவர் விஜய்யை வைத்து இயக்குவதால் படத்தை நல்ல தரமாக இயக்குவார் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. அதற்கு எல்லாம், நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் திரைப்படங்கள் நெல்சன் ஹிட் படங்களின் லிஸ்டில் இருந்தது தான்.

சென்னையை பொறுத்த வரையில் 5 நாள் முடிவில் படம் ரூ. 7 கோடிக்கு வசூலித்துள்ளது, தமிழகத்தை பொறுத்தவரை பீஸ்ட் படம் நல்ல வசூலைத்தான் செய்துள்ளது. ஆனால் எந்த இடத்திலும் பீஸ்ட் பட வசூல் பெரிய அளவில் இல்லை என்பது தான் உண்மை.

இந்த நிலையில், தான் இயக்குனரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சி பீஸ்ட் படம் குறித்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர், சில இளம் இயக்குனர்கள் ஆரம்பம் படங்கள் நன்றாக ஓடிவிட்டால் அவர்களுக்கு பெரிய நடிகர்களின் படங்களை இயக்கும் வாய்ப்பு சீக்கிரம் கிடைத்துவிடுகிறது.

உடனே அவர்கள் என்ன இயக்கினாலும் நடிகராலேயே ஓடிவிடும், வசூல் செய்துவிடும் என அலட்சியமாக உள்ளார்கள். பீஸ்ட் படத்தில் ஸ்கிரீன் பிளே சரியில்லை, படம் சரியில்லாததற்கு அதுவே காரணம் என அவர் கூறியுள்ளார்.

Views: - 663

1

0