வேலைக்கே உலை வைத்த ரூ.9 ஆயிரம் கோடி..? புகாரால் வந்த அழுத்தம் : ராஜினாமா செய்த TMB நிர்வாக இயக்குனர்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 September 2023, 10:00 pm

வேலைக்கே உலை வைத்த ரூ.9 ஆயிரம் கோடி..? புகாரால் வந்த அழுத்தம் : ராஜினாமா செய்த TMB நிர்வாக இயக்குனர்!!

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி நிர்வாக இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியுமான கிருஷ்ணன் ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் பணிக்காலம் இருக்கும் நிலையில் அவர் ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் கணக்கு வைத்துள்ள ஆட்டோ டிரைவர் ஒருவரின் வங்கிக் கணக்கில் தவறுதலாக 9 ஆயிரம் கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாகவே ஆட்டோ ஓட்டுநர் புகார் கொடுத்த நிலையில், இதன் விளைவாகவே அவர் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!