உள்துறை அமைச்சர் கொரோனாவில் இருந்து குணம்பெற வேண்டும்: முதலமைச்சர் டுவிட்
2 August 2020, 8:35 pmசென்னை: உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் நலம்பெற வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இந்த தகவலை அவர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கொரோனா அறிகுறி காரணமாக பரிசோதனை செய்து கொண்டேன். அதில் வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். எனது உடல்நிலை சீராக உள்ளது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தி கொண்டு, கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந் நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் நலம்பெற வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமது டுவிட்டரில் அவர் கூறி இருப்பதாவது: கொரோனா தொற்றில் இருந்து திரு. அமித்ஷா விரைவில் குணமடைய கடவுளை வேண்டுகிறேன். அவரது நல்ல ஆரோக்கியத்திற்கு தமிழ்நாட்டிலிருந்து வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.