17 வயது அரசு பள்ளி மாணவிக்கு நேர்ந்த விபரீதம்… சடலமாக மீட்ட சோகம் : விசாரணையில் அதிர்ச்சி!!!

Author: Udayachandran RadhaKrishnan
17 August 2023, 1:21 pm

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பரதன்தாங்கள் கிராமத்தில் வசிக்கும் கன்னிப்பண் -உஷா தம்பதியருக்கு17 வயதில் ஜனனி என்ற மகள் உள்ளார்.

இவர் செஞ்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று மீண்டும் வீடு திரும்பி உள்ளார்.

மேலும் கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய அவரது தாய் மற்றும் தந்தை ஜனனியை வீட்டில் இல்லாததால் அவரைத் தேடி இருந்தனர். ஆனால் அருகில் இருந்த கிணற்றில் பார்த்தபோது ஜனனி சடலமாக இருந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து சத்தியமங்கலம் காவல்துறையினரிடம் தகவல் அளித்ததின் பேரில் காவல்துறையினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு கிணற்றில் சடலமாக இருந்த அரசு பள்ளி மாணவி ஜனனியை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூர் ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து சத்தியமங்கலம் காவல்துறையினர் கொலையா தற்கொலையா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!