ஜாபர் சாதிக் வழக்கில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்.. டெல்லி சிறப்பு நீதிமன்றம் காட்டிய GREEN SIGNAL!

Author: Udayachandran RadhaKrishnan
16 April 2024, 2:49 pm

ஜாபர் சாதிக் வழக்கில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்.. டெல்லி சிறப்பு நீதிமன்றம் காட்டிய GREEN SIGNAL!

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய வழக்கில் சென்னையைச் சேர்ந்த முஜிபுர், முகேஷ் மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேரும் பிடிபட்டனர்.

இதையடுத்து சென்னையை சேர்ந்த ஜாபர்சாதிக், அவரது நெருங்கிய கூட்டாளி சதானந்தம் உள்ளிட்டோரையும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த 5 பேரின் நீதிமன்ற காவல் இன்று நிறைவடைந்ததை தொடர்ந்து டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் நீதிபதி சுதிர்குமார் சிரோஹி முன்பு ஜாபர் சாதிக் உள்ளிட்டோர் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதையடுத்து, 5 பேரின் நீதிமன்ற காவலை வரும் 20-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். மேலும் வழக்கின் மீதான அடுத்தக்கட்ட விசாரணை 20-ம் தேதி நடைபெறும் என்று நீதிபதி தெரிவித்தார்.

p> மேலும் படிக்க: பிரபல நடிகர் வீட்டு முன்பு GUN SHOOT நடத்திய மர்மநபர்கள்.. காட்டிக் கொடுத்த CCTV.. அதிர்ந்த போலீசார்!!

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக், சென்னையைச் சேர்ந்த முஜிபுர், முகேஷ், சதானந்தம், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 5 பேருக்கு எதிராக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் டெல்லி சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!