இரு சக்கர வாகனங்கள் திருடிய இருவர் கைது..!!
25 September 2020, 8:39 amகோவை: கோவையில் இரு சக்கர வாகனம் திருடிய இருவர் கைது
கோவையில் இந்த மாதம் 18 முதல் 21 ஆம் தேதி வரை கே ஜி மருத்துவமனை மற்றும் தாஜ் ஹோட்டல் அருகே வாகனங்கள் களாடப்பட்டதாக புகார் எழுந்துள்ளன.
இதனை விசாரித்த ரேஸ்கோர்ஸ் போலிஸார் இரண்டுபேரை கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் என்ற இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் போலிஸார் நடத்திய விசாரணையில் மூன்று இருசக்கர வாகனத்தை களவாடியது தெரியவந்தன. இதனை தொடர்ந்து அவர்களிடம் இருந்த மூன்று இருசக்கர வாகனம் பறிமுதல் செய்திருந்த போலிஸ் குற்றவாளிகள் இருவரையும் கோவை மத்திய சிறையிலடைத்தனர்.
ஏற்கனவே இவர்கள் மீது பல்வேறு குற்றச்சம்பவங்கள் தொடர்பாக புகார் எழுந்தன. சிறை தண்டனையும் பெற்றனர். ஆனாலும் தொடர்ந்து களவு சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.