அதிமுக வழக்கறிஞருக்கு அங்க என்ன வேலை? தேவையில்லாத அரசியல் ; கொந்தளிக்கும் செந்தில் பாலாஜி!
Author: Udayachandran RadhaKrishnan19 August 2025, 6:26 pm
கரூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மாவட்ட அளவில் 6 இடங்களில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கரூரில் வெங்கமேடு மற்றும் மண்மங்கலம் பகுதியில் நடைபெற்ற இந்த இரண்டு முகாம்களில், முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி கலந்து கொண்டு மக்களிடையே மனுக்களை நேரில் வாங்கி நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த, அவர், நெரூர் – உன்னியூர் உயர்மட்டப்பாலப்பணிகள், சாலைப்பணிகளின் வேலை நடைபெற்று வருவதால் விரைவில் அந்த பாலத்தினை, தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட உள்ளது கூறினார்.
மேலும் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், புகளூர் நகராட்சிக்குட்பட்ட பெண்மணி ஒருவர் தனது கணவர் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தியதாக, அந்த நகராட்சியின் திமுக கவுன்சிலரின் கணவர் மீது புகார் மனு ஒன்றினை அளித்திருந்தார்.

முற்றிலும் உண்மைக்கு புறம்பான அந்த புகார் மனுவை அளித்த பெண்மணியுடன் சேர்ந்து அதிமுக வின் வழங்கறிஞர் ஒருவர் செய்தியாளரை சந்தித்தார்.
நம்பத்தகாத செயலில் அதிமுகவின் வழக்கறிஞருக்கு அங்கு என்ன வேலை என்று கேள்வி எழுப்பியதோடு, இதில் தேவையில்லாத அரசியல் செய்கின்றனர் என்றும் அவர் கூறினார்.
