“என் மனைவியைக் கொலை செய்துவிட்டேன்” : ரத்தம் படிந்த கத்தியோடு கணவன் போலீசில் சரண்
Author: kavin kumar10 January 2022, 2:42 pm
விருதுநகர்: விருதுநகரில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்
விருதுநகர் என்ஜிஒ காலனி கம்பர் தெருவைச் சார்ந்த கற்பகம் கண்ணன் தம்பதியினர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ள நிலையில் கண்ணன் திருமங்கலத்தில் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு சண்டை வந்த நிலையில், இன்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கண்ணன் மனைவியை கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே கற்பகம் உயிரிழந்தார்.
இதையடுத்து ரத்தம் படிந்த கத்தியோடு கண்ணன் விருதுநகர் ஊரக காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஊரக காவல் துறையினர் உயிரிழந்த கற்பகத்தின் உடலை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0
0