நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இந்த 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்று இருந்தால் வாக்களிக்கலாம்…தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!

Author: Rajesh
12 February 2022, 3:17 pm
Quick Share

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அட்டைகள் இல்லாதவர்கள், வேறு எந்த ஆவணங்களைக் காண்பித்து வாக்களிக்கலாம் என்பது தொடர்பான அறிவிப்பை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தலன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

எனவே, 38 மாவட்டங்களில் உள்ள வாக்காளர்கள், தங்களுக்கு தமிழக தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்குச்சாவடி சீட்டு மாநில உள்ளவர்களும் அல்லது வாக்குச்சாவடி சீட்டு இல்லாதவர்களும் வாக்காளர் அடையாள அட்டை, அல்லது தமிழக மாநில தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள கீழ்க்காணும் 11 அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்றைக் காண்பித்து வாக்களிக்கலாம்.

1) ஆதார் அட்டை

2) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை

3) புகைப்படத்துடன் கூடிய வங்கி/அஞ்சலக கணக்குப் புத்தகங்கள்

4) தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு

5) ஓட்டுநர் உரிமம்

6) பான் கார்டு

7) தேசிய மக்கள் பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு

8) இந்திய கடவுச்சீட்டு

9) புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்

10) மத்திய / மாநில அரசு, மத்திய / மாநில அரசின் பொதுத் துறை நிறுவனங்களால் / வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்

11) பாராளுமன்ற / சட்டமன்ற / சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை

நகர்ப்புற உள்ளாட்சி நடைபெறும் வேளையில் சாதாரண தேர்தல்களில் வாக்குப்பதிவின்போது ஆள் மாறாட்டங்களைத் தவிர்க்க, மேற்காணும் அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்றைக் காண்பித்து வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Views: - 892

0

0