SIRஐ காப்பாற்றியது யார் ? ஸ்டாலின் சாரே நினைத்தாலும் இனி காப்பாற்ற முடியாது : இபிஎஸ் பரபரப்பு ட்வீட்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 June 2025, 11:59 am

அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இது குறித்து அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது X தளப்பக்கத்தில், அண்ணா பல்கலை. பாலியல் வழக்கின் குற்றவாளியான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது சென்னை மகளிர் நீதிமன்றம்.

இதையும் படியுங்க: அண்ணா பல்கலை பாலியல் குற்றவாளிக்கு ஆயுள்… 30 ஆண்டுகள் சிறை : நீதிபதி அதிரடி தீர்ப்பு!!

இந்த வழக்கில் குற்றவாளி திமுக ஞானசேகரனைக் காப்பாற்ற எத்தனையோ சித்து வேலைகளை செய்தது ஸ்டாலின் மாடல் திமுக அரசு.

அத்தனையும் முறியடித்து, மக்கள் மன்றம் முதல் சமூக ஊடகங்கள் வரை தனது தொடர் போராட்டத்தால் இந்த வழக்கின் குற்றவாளிகளில் ஒருவனான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு தண்டனையை சாத்தியப்படுத்தியுள்ளது அஇஅதிமுக.

பாதிக்கப்பட்ட மாணவியின் குரலாக அஇஅதிமுக தொடர்ந்து ஒலிக்கும் என்ற வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றி வருகிறோம். அதனால் தான் #யார்_அந்த_SIR என்ற முழுமையான நீதிக்கான கேள்வியை இன்றும் கேட்கிறோம்.

FIR-ல் குறிப்பிடப்பட்ட அந்த SIR யார்? விசாரணையின் போதே எதற்கு அந்த SIR Ruled-out செய்யப்பட்டான்? எதற்காக ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்று அவசர அவசரமாக இந்த வழக்கை முடிக்க முனைந்தது திமுக அரசு

Who saved SIR? Even if Stalin himself wanted to he can't save him anymore: EPS sensational tweet!!

#SIR_ஐகாப்பாற்றியது_யார் ? இந்த கேள்விகள் கேள்விகளாகவே நீண்ட நாட்கள் இருக்காது. அதிமுக ஆட்சி அமைந்ததும், அனைத்து பதில்களும் கிடைக்கத் தான் போகிறது. ஸ்டாலின் சாரே நினைத்தாலும், அந்த SIR-ஐ எந்த சாராலும் காப்பாற்ற முடியாது! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

  • censor board denies censor certificate for manushi movie produced by vetrimaaran வெற்றிமாறன் படத்தை நிராகரித்த சென்சார் போர்டு; நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்த தயாரிப்பாளர்!
  • Leave a Reply