நண்பனை வீட்டுக்குள் நம்பி விட்ட கணவனுக்கு ஷாக்.. மனைவியுடன் படுக்கையை பகிர்ந்த துரோகம்!

Author: Udayachandran RadhaKrishnan
9 January 2025, 11:30 am

வீட்டுக்குள் நம்பி விட்ட நண்பன் மனைவியுடன் உல்லாசமாக இருந்து மயக்கி இழுத்து ஒடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா பெலகாவி மாவட்டம் கானாபுரா பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஆசிப். இவர் மனைவி மாசாவி. இவர்கள் கடந்த 7 வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்தனர்.

இதையும் படியுங்க: Beef கடை போடக்கூடாது என தம்பதியை மிரட்டிய பாஜக பிரமுகர்…வைரலாகும் வீடியோ!!

பின்னர் இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில்தான் பசவராஜ் என்பவருடன் மாசாவிக்கு பழக்கம் ஏற்பட்டது.

பசவராஜ் நண்பன் என்பதால் வீட்டுக்கு அடிக்கடி வருவதை ஆசாத் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. இப்படி வரும் போது மாசாவியுடன் ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. ஆசாத் இல்லாத நேரம் பார்த்து தங்களது இச்சைகளை அடிக்கடி தீர்த்துக்கொண்டனர்.

கடைசி வரை ஆசாத்துக்கு இருவர் மீதும் சந்தேகமே வரவில்லை. இந்தநிலையில் புத்தாண்டு அன்று மாசாவி குழந்தைகளுடன், கள்ளக்காதலன் பசவரஜூடன் ஓடிவிட்டார்.

மாசாவி கணவரின் கார், சொத்து ஆவணங்கள், 60 கிராம் நகைகள், ₹5 லட்சம் பணம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு ஊரை விடடே ஓடி விட்டார். இதையறிந்த ஆசாத், நண்பனும் மனனைவியும் செய்த துரோகத்தால் நொந்து போனார்.

பின்னர் போலீசில் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதல் ஜோடியை போலீசார் தேடி வருகின்றனர்.

  • famous journalist criticize mani ratnam for muththa mazhai song ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…