தோட்டாவுடன் கோவை விமான நிலையம் வந்த பெண்… விசாரணையில் முக்கிய தகவல்!

Author: Udayachandran RadhaKrishnan
14 June 2025, 11:25 am

கோவை விமான நிலையத்தில் இன்று காலை வழக்கமான சோதனைகளில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு இருந்தனர்.

இந்நிலையில் பெங்களூரு செல்லும் விமானத்தில் பயணிக்க வந்த பெண் பயணி சரளா ராமகிருஷ்ணன் என்பவரின் உடைமைகள் சோதிக்கப்பட்டது.

இதையும் படியுங்க: திமுகவில் இருந்து விலகுகிறதா முக்கிய கட்சி? தவெகவுடன் இணைய 3 கட்சிகள் பேச்சுவார்த்தை?!!

அப்பொழுது அவர் கொண்டு வந்த பையில் 9 mm வகை தோட்டா இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை அடுத்து சரளா ராமகிருஷ்ணன் என்ற அந்த பெண் பயணியை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர்.

Woman arrives at Coimbatore airport with bullets

பீளமேடு காவல் துறையிடம் ஒப்படைத்தனர். பீளமேடு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அந்தப் பெண்ணிடம் போலீஸ் விசாரணை மேற்கொள்ளனர்.

விசாரணையில் அவர் கோவையைச் சேர்ந்த பிரபல அறக்கட்டளையான ராமகிருஷ்ணா குழும அறக்கட்டளையின் அறங்காவல் மனைவி என்பதும், பெங்களூருக்கு கிளம்பிய பொழுது துப்பாக்கி தோட்டா இருந்தததை கவனிக்காமல் எடுத்து வந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. அவரிடம் பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • vijay is bjp c team explained by vanathi srinivasan விஜய் பாஜகவோட C team? தவெக குறித்து ஓபனாக போட்டுடைத்த பிரபலம்!
  • Leave a Reply