பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… வீடியோ எடுத்த பெண்ணிடம் போலீஸ் விசாரணை.. மிரட்டல் விடுவதாக புகார்!

Author: Udayachandran RadhaKrishnan
23 August 2025, 2:11 pm

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள அரசு பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக மாணவிகள் மூவர் பேசும் வீடியோ வெளியாகிறது.

நேற்றைய தினம் இது தொடர்பாக காவல்துறையினர் பள்ளியில் விசாரணை மேற்கொண்ட நிலையில் அந்த வீடியோவை எடுத்த பெண்ணை போத்தனூர் காவல் நிலையத்தில் ஆஜராக சம்மன் அனுப்பி இருந்த நிலையில் விசாரணைக்காக அவர் ஆஜரானார் .

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அந்த பெண், எவ்வித உள் நோக்கமும் இல்லாமல், பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காகவே வீடியோ எடுத்து வெளியிட்டதாகவும் இது தொடர்பாக புகார் அளித்த நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் வீடியோ எடுத்து வெளியிட்டதாகவும் தெரிவித்த அவர் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு அரசியல் ரீதியிலான ஆதரவு இருப்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என கூறினார்.

மேலும் இனி அந்த பள்ளியில் பெண் குழந்தைகள் மீது தவறான கண்ணோட்டத்தில் யாரும் நடந்து கொள்ள மாட்டார்கள். இந்த சம்பவம் எதுவாயினும் தனது நோக்கம் வெற்றி அடைந்து விட்டதாக தெரிவித்தார்.

முதலில் தான் வீடியோ எடுத்ததாகவும் ஆனால் நான் எடுத்தால் ஏற்கனவே பள்ளியில் உள்ள ஆசிரியர்களுக்கும் தனக்கும் உள்ள விரோதம் காரணமாக எடுத்ததாக திசை திருப்புவார்கள் என்பதால் வேறு ஒரு நபரை வைத்து வீடியோ எடுத்ததாகவும் விளக்கம் அளித்தார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!