சட்டம் நெருங்கினால் வயசாயிடுச்சு, நெஞ்சு வலினு சொல்றது.. டாக்டர் ஷர்மிளாவுக்கு நடிகை கஸ்தூரி பதிலடி!!

Author: Udayachandran RadhaKrishnan
31 January 2024, 10:00 am

சட்டம் நெருங்கினால் வயசாயிடுச்சு, நெஞ்சு வலினு சொல்றது.. டாக்டர் ஷர்மிளாவுக்கு நடிகை கஸ்தூரி பதிலடி!!

தெலங்கானாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கமா ரெட்டி தொகுதியில் முதல்வர் வேட்பாளர்கள் இருவரும் போட்டியிட்டனர்.

அதாவது பிஆர்எஸ் கட்சியின் தலைவரும் முதல்வர் வேட்பாளருமான சந்திரசேகர ராவும் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளரான ரேவந்த் ரெட்டியும் போட்டியிட்டனர்.

இவர்களை எதிர்த்து பாஜக சார்பில் கடிபள்ளி வெங்கட ரமண ரெட்டி கமா ரெட்டி தொகுதியில் போட்டியிட்டார். யாரும் எதிர்பாரா வகையில் இருவரையும் தோற்கடித்து பாஜக வேட்பாளர் கடிபள்ளி வெங்கட ரமண ரெட்டி வெற்றி பெற்றார்.

பெரிதும் கவனிக்கப்பட்ட கடிபள்ளி வெங்கட ரமண ரெட்டி, தற்போது நகர மாஸ்டர் பிளானின் ஒரு பகுதியாக சாலை விரிவாக்கத் திட்டத்திற்காக வட்லூர் சாலையில் உள்ள தனது வீட்டை இடித்தார்.

அந்த சாலையில் ஏராமான வீடுகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறப்பட்டது. அதில் பாஜக எம்எல்ஏ வீடும், ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் சாலை அமைக்க இடையூறாக இருந்த தனது வீட்டை புல்டோசர்கள் கொண்டு கடிபள்ளி வெங்கட ரமண ரெட்டி இடித்துள்ளார். சொந்த வீட்டை சாலை பணிக்காக இடித்து தள்ளியதால் மீண்டும் பாஜக எம்எல்ஏ பேசப்பட்டார்.

இது குறித்து நடிகை கஸ்தூரி, தனது எக்ஸ் தள பக்கத்தில் இந்த தகவலை பகிர்ந்து, நம்புகிறீர்களோ இல்லையோ! தெலுங்கானா பாஜக எம்எல்ஏ கேவி ரமணா ரெட்டி சாலை அமைக்க தனது சொந்த வீட்டை இடித்துள்ளார். என்ன ஒரு மனிதன்! ரேவந்த் ரெட்டி மற்றும் கே.சி.ஆர் இருவரையும் அவர் சட்டசபை தேர்தலில் வென்றதில் ஆச்சரியமில்லை! என குறிப்பிட்டிருந்தார்.

இதனை பார்த்த டாக்டர் ஷர்மிளா, ஆக்கிரமித்து கட்டிய வீட்டை இடிச்சிருக்காங்க…இதுல என்ன பெருமை? அரசு இடிச்சா அசிங்கம்னு முந்திகிட்டு… ஏதோ தியாகி மாதிரி வேஷம் போட வேண்டியது … இதுக்கு What a man!என கஸ்தூரியின் பதிவை ரீடிவீட் செய்து பதில் அளித்திருந்தார்.

ஷர்மிளாவின் இந்த பதிவை பார்த்த நடிகை கஸ்தூரி, எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அதில் பட்டா மோசடி எல்லோருக்கும் கைவருமா? நிலத்தை அபகரித்து ஏரியை ஆக்கிரமித்து ஆஸ்பத்திரி, கல்லூரி, பள்ளி, ஹோட்டல் என்று கட்டி சட்டம் நெருங்கினால் வயசாயிடிச்சு, நெஞ்சுவலி என்று சொல்லும் திருடர்களுக்கு வலிய சென்று விதிமீறலை திருத்திக் கொள்வதெல்லாம் புரியாது என்று பதிலடி கொடுத்துள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!