செம்மண் அள்ளிய வழக்கில் அமைச்சர் பொன்முடியின் சொத்துக்கள் முடக்கம் : அமலாக்கத்துறை அதிரடி!!

Author: Udayachandran RadhaKrishnan
26 July 2024, 7:46 pm

செம்மண் குவாரி முறைகேடு வழக்கில், அமைச்சர் பொன்முடியின் ரூ.14.21 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக செம்மண் அள்ளிய வழக்கில் பொன்முடியின் சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் எம்.பி., கவுதம சிகாமணி தொடர்புடைய வழக்கில் அமலாக்கத்துறை அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. இதேபோல், அமைச்சர் பொன்முடி, அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!