கேஸ் சிலிண்டர் வெடித்து பயங்கர விபத்து ; சத் பூஜைக்காக உணவு சாப்பிட்ட போது விபரீதம்… 30 பேர் படுகாயம்… பலரது நிலை கவலைக்கிடம்…!!

Author: Babu Lakshmanan
29 October 2022, 11:23 am
Quick Share

பீகார் : பீகாரில் சத் பூஜையின் போது கேஸ் சிலிண்டர் வெடித்த பயங்கர விபத்தில் 30 பேர் பலத்த காயமடைந்தனர்.

அவுரங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், தங்களின் வீட்டில் சத் பூஜைக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக அதிகாலை 2.30 மணியளவில் சமைத்துக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்து பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு தீக்காயங்களுடன் இருந்த 30க்கும் மேற்பட்டோரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் பாதிக்கப்பட்ட பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போலீசாருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 301

0

0