இது வியாபார சந்தை கடை கிடையாது… சைலண்டாக எல்லாமே நடந்துகிட்டு தான் இருக்கு ; கூட்டணி குறித்து அண்ணாமலை சொன்ன தகவல்…!!

Author: Babu Lakshmanan
12 February 2024, 12:48 pm
Quick Share

குடியுரிமை சட்டத்தால் சிறுபான்மையினருக்கு பாதிப்பு கிடையாது என்று சென்னை பழைய விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது :- தமிழக காவல்துறையை வைத்து வலுகட்டாயமாக தங்க சாலையில் உள்ள கடைகளை அடக்கி வைத்து மின்சாரத்தை துண்டிக்க வைத்தது யாரும் வரக்கூடாது என வாய்மொழி உத்தரவு போட்டு இருந்தது. இது போல் தமிழ்நாட்டில் நடக்குமா என தேசிய தலைவர் ஆச்சரியப்பட்டார்கள். இதை எல்லாம் தாண்டி மக்கள் வந்தார்கள். இதனால், தனது மேடையில் கோபத்தை நட்டா வெளிப்படுத்தினார்கள். இதையெல்லாம் தாண்டி தான் அரசியல் மாற்றம் நடக்க வேண்டும். தமிழகத்தில் அரசியலை சுத்தப்படுத்த வேண்டும் என மனதளவில் தயாராகி விட்டோம். திமுகவின் தோல்வி பயம் தெரிகிறது.

சென்னையை பொறுத்தவரை காவல்துறையோடு சண்டை போட்டு செய்ய வேண்டும் என விரும்பவில்லை. திமுக போலீசை ஏவி விட்டு தான் சண்டை போடுவார்கள். காவல்துறையுடன் உரசல் வேண்டாம் என்பது நிலைப்பாடு. சென்னையில் மக்களின் எழுச்சி. மாற்றத்திற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள். சென்னை எம்.பிக்கள் குடும்ப அரசியலின் இலக்கணமாக இருக்கிறார்கள். சாமானிய மக்களின் பிரச்சனைகளை புரிதல் கிடையாது. மக்கள் சாலைக்கு வந்து விட்டால் புரட்சி நடக்கும் என திமுகவிற்கு தெரியும். சென்னையில் மாற்றம் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

கூட்டணி தொடர்பாக பேச நேரமில்லை. பல்வேறு பணி சுமைகளுக்கிட தேசிய தலைவர் தமிழகத்திற்கு வந்தார். கூட்டணி கட்சி தலைவர்கள் அன்பின் அடிப்படையில் வரவேற்க வந்து இருந்தார்கள். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நிறைய பேர் வந்து இருக்கிறார்கள். சென்று இருக்கிறார்கள். யார் இருக்கிறார்கள். போய் விட்டார்கள் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லை என்கிறார். (எடப்பாடி பழனிசாமி) இல்லை என்பதால் மேற்கொண்டு பேச என்ன இருக்கிறது.

பாராளுமன்ற தொகுதிக்கு குழு அமைக்கப்பட்டு உள்ளது. ஒருங்கிணந்த 4 ஆயிரம் பேர் கூட்டம் நடந்தது. தயாராக இருக்கிறோம். வேலை தொடங்கி விட்டோம். தென் சென்னைக்கு நட்டா, அமித்ஷா வந்து விட்டார்கள். பெரிய தலைவர் வருகிறார் என்றால் போகாத தொகுதிக்கு அழைத்து செல்ல வேண்டும். சென்னையில் எல்லா எம்.எல்.ஏ.க்களும் மோசமாக இருக்கிறார்கள். எழிலரசன் மக்கள் கேள்வி கேட்டார்கள். சேகர்பாபுவிற்கும் அதே பிரச்சனை தான்.

யாத்திரையில் நான் பேசியதை கேட்டால் புரியும். அரசியல் எதை நோக்கி போகிறது என்று புரியும். அதில் மக்களுக்கும் எல்லாருக்கும் புரியும். கூட்டணி என்பது வியாபார சந்தை கடை கிடையாது. பொதுவான சிந்தனை இருக்க வேண்டும். தமிழ்நாடு எங்கு செல்ல வேண்டும் என்ற பொதுவான புரிதல் இருக்க வேண்டும். திமுகவை அகற்ற வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். 400 எம்.பிக்களை தாண்டி மோடி தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற வைராக்கியம் இருக்க வேண்டும். கூட்டணி குறித்து யார் எங்கு பேச வேண்டுமோ, யாரிடம் பேச வேண்டுமோ எல்லாமே நடந்து கொண்டு இருக்கிறது.

தமிழ்நாட்டில் பா.ஜ.க. எங்கு இருக்க வேண்டுமோ அங்கு இருக்கிறது. கருத்துக் கணிப்புகள் வெளியானதில் பாஜகவிற்கு 20 சதவீத வாக்குகள் என்ற இடத்தில் இருக்கிறோம். ஒரு மாதத்தில் 25 சதவீதத்தை தாண்டி விடுவோம். ஒட்டுகள் வாங்குவது தான் முக்கியம்.

எத்தனை இடங்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்று தற்பொழுது கணிக்க முடியாது. தமிழ்நாடு முதன் முறையாக கடுமையான மும்முனை போட்டியை சந்தித்து இருக்கிறது. கருத்து கணிப்புகளும் மும்முனை போட்டிகளின் அடிப்படையில் தான் எடுக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் பாஜக வாக்கு வங்கி வளர்ந்து வருவதை கருத்து கணிப்புகள் கூறுவதை வரவேற்கத்தக்கது.

சிறுபான்மை, பெரும்பான்மை என திட்டத்தை செயல்படுத்தும் போது முடிவு எடுக்க கூடிய ஆள் மோடி கிடையாது. இந்தியாவில் இருக்க கூடிய சிறுபான்மையினருக்கு குடியுரிமை சட்டத்தினால் பாதிப்பு இல்லை. குடியுரிமை எடுக்க போவதில்லை. புதிதாக தர போகிறோம். குடியுரிமை பறிக்கக் கூடிய அதிகாரம் அரசுக்கே இல்லை. அரசியலமைப்பு சட்டப்படி யாராலும் குடியுரிமையை எடுக்க முடியாது, கூறினார்.

Views: - 183

0

0