மின்சாரம் வாங்கவோ, விற்கவே கூடாது ; தமிழக அரசுக்கு மத்திய அரசு போட்ட கண்டிப்பான உத்தரவு.. ஏன் தெரியுமா.?

Author: Babu Lakshmanan
19 August 2022, 9:54 am
Quick Share

சென்னை : தமிழகம் உள்பட 13 மாநிலங்கள் மின்சாரம் வாங்கவோ, விற்கவோ கூடாது என்று மத்திய அரசு தடை விதித்துள்ளது.

பல்வேறு மாநிலங்களின் மின்பகிர்மான நிறுவனங்கள் மத்திய அரசுக்கு ரூ.5,100 கோடி தொகையை செலுத்த வேண்டி இருப்பதாகக் கூறப்படுகிறது.

எனவே, டெல்லி, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, பீகார், உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சாரம் வாங்க, விற்க நேற்று இரவு முதல் மத்திய அரசு தடை விதித்துள்ளது. மின்பகிர்மான நிறுவனங்கள் ரூ.5,100 கோடி பாக்கி நிலுவைத் தொகை செலுத்த தவறியதால் மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

Views: - 383

0

0