கொடைக்கானல் செல்ல மதுரை AIRPORT வந்த CM : கஞ்சா பொட்டலுத்துடன் வந்த பாஜக பிரமுகர்.. பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
29 April 2024, 11:43 am

கொடைக்கானல் செல்ல மதுரை AIRPORT வந்த CM : கஞ்சா பொட்டலுத்துடன் வந்த பாஜக பிரமுகர்.. பரபரப்பு!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் குடும்பத்துடன் கொடைக்கானல் செல்வதற்காக இன்று தனி விமான மூலம் மதுரை விமான நிலையம் வரவுள்ளார் .

மதுரை விமான நிலையத்திற்கு முதல்வர் வருகையொட்டி மதுரை மாநகர் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அப்போது மதுரை விமான நிலையத்திற்கு பார்த்து மனு கொடுப்பதற்காக வந்த பாஜக நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் போதை பொருள் பழக்கம் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாக தடுக்க வேண்டிய மனு அளிப்பதற்காக பாஜக செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி கையில் கஞ்சா பொட்டலுத்துடன் வந்துள்ளார்.

மதுரை விமான நிலையம் வந்த பாஜக நிர்வாகியை போலீசார் அனுமதிக்க மறுப்பு தெரிவித்து காவல்துறை வாகனத்தில் அழைத்துச் சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!