அன்றும்.. இன்றும் நாங்க ஆதரவு தான்… தமிழகத்தை வஞ்சிக்க மாட்டோம் என உத்தரவாதம் தர முடியுமா..? CM ஸ்டாலின் பரபர அறிக்கை

Author: Babu Lakshmanan
20 September 2023, 11:29 am
Quick Share

33 சதவீத மகளிருக்கான இடஒதுக்கீடு தொடர்பான மசோதா தாக்கலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மகளிர்‌ உரிமைக்கு 75 ஆண்டு காலமாக பாடுபட்டு வரும்‌ தி.மு.க‌, மகளிர்‌ ஒதுக்கீட்டை அன்றும்‌ வரவேற்றது; இன்றும்‌ வரவேற்கிறது!

சர்ச்சைக்குரிய வேளாண்‌ சட்டங்கள்‌, குடியுரிமைத்‌ திருத்தச்‌ சட்டம்‌, காஷ்மீர்‌ சிறப்பு அந்தஸ்து பறிப்பு சட்டம்‌ மற்றும்‌ முற்பட்ட சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும்‌ சட்டங்களை நிறைவேற்றுவதில்‌ காட்டிய அக்கறையில்‌ 100-ல்‌ 1 விழுக்காடு கூட மகளிர்‌ மசோதாவை நிறைவேற்ற மோடி அரசு காண்பிக்காதது ஏன்‌?

பெரும்பான்மை பலம்‌ இருந்தும்‌ கடந்த 9 ஆண்டு காலமாகப்‌ பாராமுகமாக இருந்துவிட்டு, தேர்தல்‌ நேர வண்ணஜாலம்‌ காட்டி ஏமாற்ற நினைக்கும்‌ முயற்சியை மக்கள்‌ புரிந்துகொள்வார்கள்‌!

மக்கள்‌ தொகைக்‌ கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும்‌ என்ற உத்தரவாதம்‌ இல்லை; நடைபெறாத மக்கள்தொகை கணக்கெடுப்பு, அதன்‌ அடிப்படையிலான தொகுதி மறுவரையறை – அதன்‌ பேரில்‌ 2029-இல்‌ அமலுக்கு வரப்போவதாக கூறப்படுவதற்கு இப்போது சட்டம்‌ நிறைவேற்றும்‌ விசித்திர தந்திரம்‌ – எல்லாம்‌ தோல்வி
பயம்‌ ஏற்படுத்தும்‌ தேர்தல்‌ மாய்மாலம்‌!

தொகுதி மறுவரையறை என்ற பெயரில்‌ தென்னிந்திய மக்களை, குறிப்பாக தமிழ்நாட்டு மக்களின்‌ மக்களவைப்‌ பிரதிநிதித்துவத்தை குறைக்கும்‌ பேராபத்து – சூழ்ச்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்‌; தமிழ்நாட்டை வஞ்சிக்க மாட்டோம்‌ என்ற உத்தரவாதத்தை ஒன்றிய அரசு இப்போதே தர வேண்டும்‌!

பிற்படுத்தப்பட்ட – மிகவும்‌ பிற்படுத்தப்பட்ட சமுதாயப்‌ பெண்களுக்கும்‌ இடஒதுக்கீடு வழங்க வேண்டும்‌ என்ற கோரிக்கையில்‌ உள்ள நியாயத்தை பா.ஜ.க. அரசு பரிசீலிக்க வேண்டும்‌!, எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 195

0

0