கோவை கார் வெடிப்பு சம்பவம் ; தஞ்சையில் 3 பேர் மீது சந்தேகம்… திடீரென சோதனையில் ஈடுபட்ட போலீசார்!!

Author: Babu Lakshmanan
29 October 2022, 10:55 am

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தஞ்சையில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் வெடித்துச் சிதறியது. அதில் உக்கடம் ஜி.எம். நகர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். கார் வெடித்து சிதறிய இடத்தில் ஆணிகள் கோழிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.

இது குறித்து உக்கடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் முபினிடம், 2019ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் அவரிடம் விசாரணை நடத்தியதும் தெரியவந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை உபா சட்டத்தில் கைது செய்த போலீசார், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், தீவிரவாத தாக்குதல் திட்டம் தீட்டியதாக தகவல் வெளியான நிலையில், இந்த வழக்கின் விசாரணை என்ஐஏவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. என்ஐஏ அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

கோவையில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, தமிழகம் முழுவதும் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தஞ்சையில் ஆடக்காரத்தெரு, கொள்ளுப்பேட்டை தெரு, சையது அலிபாட்சா தெரு ஆகிய பகுதிகளில் உள்ள 3 பேரின் வீடுகளில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். சுமார் ஒருமணி நேரம் நடந்த சோதனையில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!