தவறான ஆளை தேர்ந்தெடுத்தால் 5 வருடம் அநீதி.. சரியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள் ; வைரமுத்து வலியுறுத்தல்!

Author: Udayachandran RadhaKrishnan
18 April 2024, 9:43 am
Vairam
Quick Share

தவறான ஆளை தேர்ந்தெடுத்தால் 5 வருடம் அநீதி.. சரியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள் ; வைரமுத்து வலியுறுத்தல்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக தொடங்க உள்ளது. நாளை காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. மேலும் 100% வாக்குப்பதிய அனைவரும் முன் வர விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அரசியல் கட்சியினர் உள்பட 950 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இதில் 76 பேர் பெண்கள். 874 பேர் ஆண்கள். இவர்களின் எதிர்காலத்தை 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 வாக்காளர்கள் நிர்ணயம் செய்கிறார்கள்.

மேலும் படிக்க: அண்ணாமலை ஜெயிக்கணும்… கைவிரலை துண்டித்த BJP நிர்வாகி : மருத்துவமனையில் அனுமதி!!

இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள X தளப்பதிவில். விரலில் வைத்த கருப்புமை நகத்தைவிட்டு வெளியேறச் சில வாரங்கள் ஆகும்.

பிழையான ஆளைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அநீதி வெளியேற
ஐந்தாண்டுகள் ஆகும்.

சரியான நெறியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள், வாக்கு என்பது
நீங்கள் செலுத்தும் அதிகாரம் என பதிவிட்டுள்ளார்.

Views: - 85

0

0